தமிழகத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியில் வீட்டின் உள்ளே புகுந்து சிலிண்டரைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவும் நிலையில், மர்ம நபரின் இச்செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.