தமிழ்நாடு

இழப்பீடு இல்லையா ? "தற்கொலை செய்வோம்"- குத்தகை நில விவசாயிகள் கண்ணீர்

பட்டுக்கோட்டையில், கஜா புயலால் சேதமடைந்த குத்தகை நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சேட்டு என்பவர், பட்டுக்கோட்டை அருகேயுள்ள புதுரோடு பகுதியில், 10 ஏக்கர் நிலத்தை எடுத்து, தனது குடும்பத்துடன் சேர்ந்து கரும்பு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கஜா புயலில் சிக்கி கரும்பு பயிர்கள் சேதமடைந்தன. சேதங்களை கணக்கிட வரும் அதிகாரிகள், தங்களுக்கு அந்த ஊர் விலாசத்தில் ஆதார் அட்டை இல்லை எனக்கூறி, சேத விவரங்களை பதிவு செய்ய மறுப்பதாக, சேட்டு வேதனை தெரிவித்துள்ளார். இதனால் தங்களுக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று, அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை