தமிழ்நாடு

சுங்கத்துறையினர் வாகன சோதனை - சொகுசு பேருந்தில் சிக்கிய ரூ.62 லட்சம்...

ஆம்னி பேருந்தில் இருந்து, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 62 லட்சம் ரூபாயை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து ஆம்னி பேருந்தில் இருந்து, உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 62 லட்சம் ரூபாயை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். எஸ்.பி. பட்டிணம் பேருந்து நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், தனியார் பேருந்தில் பல லட்சம் ரூபாய் மறைத்து எடுக்கப்பட்டு வருவதாக, சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் சுங்கத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஆம்னி பேருந்து ஒன்றில், 62 லட்சத்து 25 ஆயிரத்து 200 ரூபாய் பணம் வைத்திருந்த அப்துல் ரவூப் என்பரை

கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அப்துல் ரவூபிடம், விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது ஹவாலா பணமாக இருக்கலாமோ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்