தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் 32 கோடி மதிப்பீட்டில் 22 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம், முதலமைச்சர் இந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முடிவுற்ற 25 கோடி செலவிலான திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, 30 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.