தந்தி டிவி செய்தி எதிரொலியாக, கடலூர் மாவட்டம் எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகப்பு கருதி தடுப்புகள் அமைப்பட்டன. உரிய தடுப்புகள் இல்லாத காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் ஏற்பட்ட விபத்துகள் குறித்து தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.