தமிழ்நாடு

பெட்டி கடையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக்கடை அருகே பெட்டி கடை நடத்தி வரும் மாரிமுத்து டாஸ்மாக் பாட்டில்களை தன்னுடைய பெட்டி கடைகளில் வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பெட்டி கடையில் சோதனை செய்தபோது 147 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 147 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Union Budget 2026 | "இனி அனைத்து மாவட்டங்களிலும்" - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் அடிக்கடி ஒலிக்கும் `தமிழ்நாடு’ - முத்தான மூன்று அறிவிப்புகள்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு