தமிழ்நாடு

இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் : வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

கடலூர் அருகே வாகன ஓட்டுநர்களின் முழு ஒத்துழைப்புடன் இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் நடத்தப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

* தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், பெரும்பாலான இளைஞர்கள் தலைகவசம் அணியாமல் விபத்தில் உயிரிழக்க நேரிடுகிறது. இதனை தடுக்கும் வகையில், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டு கிராமத்தில், இலவச ஹெல்மெட் வாடகை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

* கடந்த இரண்டு மாதமாக இயங்கி வரும் இந்த ஹெல்மெட் வாடகை நிலையத்தை 40க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரைக்கும் ஒரு ஹெல்மெட் கூட யாரும் எடுத்துச் செல்லாமல், மீண்டும் அதே இடத்தில் வைத்து செல்வது தான் சிறப்பு.

* எதற்கெடுத்தாலும் பணத்தை எதிர்பார்க்கும் இந்த உலகில், சாலை விபத்தில் உயிர் பறிபோவதை தவிர்க்கும் வகையில், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் வழங்கி வரும் இலவச ஹெல்மெட் சேவை ஓட்டுநர்கள் மத்தியில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை