கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் புகுந்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை இளைஞர்கள் அரிவாளால் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது மற்றும் கஞ்சா போதையில் அராஜகத்தில் ஈடுபட்ட அபினேஷ் மற்றும் ஐயப்பனை, மருத்துவமனை ஊழியர்கள் அறையில் வைத்து பூட்டினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.