தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றும்போது அத்துமீறல் : கோட்டாட்சியரை கொல்ல முயற்சி

நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வந்த கோட்டாட்சியர் மீது டீசல் ஊற்றப்பட்டதால் பரபரப்பு ஏ​ற்பட்டது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில், உள்ள கருப்பசாமி கோயிலின் பின்புறம், நீர்வழி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை, கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அகற்ற வந்தனர். அப்போது, அந்த கோயிலைச் சேர்ந்த சாமியாரின் ஆதரவாளர்கள், பொக்லைன் எந்திரத்தை வழி மறித்து தீக்குளிக்க முயன்றனர். மேலும், கோட்டாட்சியர் ராஜேந்திரன் மீதும் டீசலை சிலர் ஊற்றியுள்ளனர். உடனடியாக அவர் கோயிலை விட்டு வெளியேறினார். இது குறித்து, கோட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்