தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றும்போது அத்துமீறல் : கோட்டாட்சியரை கொல்ல முயற்சி

நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வந்த கோட்டாட்சியர் மீது டீசல் ஊற்றப்பட்டதால் பரபரப்பு ஏ​ற்பட்டது.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில், உள்ள கருப்பசாமி கோயிலின் பின்புறம், நீர்வழி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை, கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அகற்ற வந்தனர். அப்போது, அந்த கோயிலைச் சேர்ந்த சாமியாரின் ஆதரவாளர்கள், பொக்லைன் எந்திரத்தை வழி மறித்து தீக்குளிக்க முயன்றனர். மேலும், கோட்டாட்சியர் ராஜேந்திரன் மீதும் டீசலை சிலர் ஊற்றியுள்ளனர். உடனடியாக அவர் கோயிலை விட்டு வெளியேறினார். இது குறித்து, கோட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை