தமிழ்நாடு

கடந்தாண்டை விட இந்தாண்டு பட்டாசு விற்பனை அதிகரிப்பு - பட்டாசு விற்பனையாளர்கள்

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பட்டாசு விற்பனை சிறப்பாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

* விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை போன்ற பகுதிகளில் 900 மேற்பட்ட பட்டாசு ஆலைகளில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

* விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளும் கவரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட புதுவகையான கம்பி மத்தாப்பு பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

* இதே போல் 7 முதல் 75 செ.மீ வரை அளவு உள்ள வண்ண வண்ண கலர்களில் கம்பி மத்தாப்புக்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், குறிப்பாக PINK கம்பி மத்தாப்பு மற்றும் லெமன் மத்தாப்புகள் இந்தாண்டுக்கான புதுவரவாக உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

* புது வரவாக 4 மற்றும் 5 வண்ணங்களை கொண்ட ஒரே கம்பி மத்தாப்புக்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிப்பதாக ஊழியர் நந்தினி தெரிவித்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்