தமிழ்நாடு

கடந்தாண்டை விட இந்தாண்டு பட்டாசு விற்பனை அதிகரிப்பு - பட்டாசு விற்பனையாளர்கள்

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பட்டாசு விற்பனை சிறப்பாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

* விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை போன்ற பகுதிகளில் 900 மேற்பட்ட பட்டாசு ஆலைகளில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

* விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளும் கவரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட புதுவகையான கம்பி மத்தாப்பு பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

* இதே போல் 7 முதல் 75 செ.மீ வரை அளவு உள்ள வண்ண வண்ண கலர்களில் கம்பி மத்தாப்புக்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், குறிப்பாக PINK கம்பி மத்தாப்பு மற்றும் லெமன் மத்தாப்புகள் இந்தாண்டுக்கான புதுவரவாக உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

* புது வரவாக 4 மற்றும் 5 வண்ணங்களை கொண்ட ஒரே கம்பி மத்தாப்புக்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிப்பதாக ஊழியர் நந்தினி தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்