தமிழ்நாடு

கடந்தாண்டை விட இந்தாண்டு பட்டாசு விற்பனை அதிகரிப்பு - பட்டாசு விற்பனையாளர்கள்

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பட்டாசு விற்பனை சிறப்பாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

* விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை போன்ற பகுதிகளில் 900 மேற்பட்ட பட்டாசு ஆலைகளில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

* விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளும் கவரும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட புதுவகையான கம்பி மத்தாப்பு பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

* இதே போல் 7 முதல் 75 செ.மீ வரை அளவு உள்ள வண்ண வண்ண கலர்களில் கம்பி மத்தாப்புக்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், குறிப்பாக PINK கம்பி மத்தாப்பு மற்றும் லெமன் மத்தாப்புகள் இந்தாண்டுக்கான புதுவரவாக உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

* புது வரவாக 4 மற்றும் 5 வண்ணங்களை கொண்ட ஒரே கம்பி மத்தாப்புக்களும் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். நாளொன்றுக்கு 50 முதல் 100 பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரிப்பதாக ஊழியர் நந்தினி தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை