தமிழ்நாடு

பன்றிக்கு வைத்த வெடியை கடித்த மாடு படுகாயம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரியில் பன்றிக்கு வந்த வெடி பொருளை மாடு கடித்து வாய் வெடித்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி முத்துராமன், பத்துக்கு மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல மேச்சலுக்கு மாடை விட்டுவிட்டு வீடு திரும்பியபொழுது, திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. சம்பவ இடம் சென்று பார்த்தபொழுது, காட்டுப்பன்றி வேட்டையாட வைக்கப்பட்ட வெடி பொருளை மாடு கடித்ததால், வெடி பொருள் மாடு வாயில் வெடித்து, மாடு இறக்கும் தருவாயில் உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்