தமிழ்நாடு

விஷச்செடியை தின்ற 5 பசுமாடுகள் உயிரிழப்பு

தந்தி டிவி

விஷச்செடியை தின்ற 5 பசுமாடுகள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் விஷச் செடியை தின்ற 5 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. டி.என்.புளியங்குடியைச் சேர்ந்த முத்து என்பவருக்குச் சொந்தமான மாடுகளை அவருடைய உறவினர், சமுத்திரம் குளத்துக்கரைக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அங்கு மழைக்காலத்தில் முளைத்திருந்த செம்மண் நெருஞ்சி விஷ செடிகளை தின்ற 5 மாடுகள், அடுத்தடுத்து வயிறு வீங்கி உயிரிழந்தன. இந்நிலையில் விஷ செடிகளை அழித்து, கால்நடைகள் உயிரிழப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

==

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே