கொரோனா தொற்றை தடுக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி அளித்திருக்க வேண்டும், இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறை உள்பட பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தனிமைப்படுத்தப்படும் அறைகள், உணவகம் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.