தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதலமைச்சர் இன்று ஆலோசனை - ஊரடங்கு தளர்வு பரிந்துரை, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை ஒரு சில நிறுவனங்களுக்கு தளர்த்துவது குறித்த பரிந்துரையை நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சரிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளனர்.இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12 மணி அளவில் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, 12 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவுடனும்12.30 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு, ஊரடங்கு விதிகளை தளர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு