தமிழ்நாடு

"தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோய்த் தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா நோய்த் தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சேலத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா சூழலிலும் வளர்ச்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்