தமிழ்நாடு

"பரிசோதனை செய்தாலே 14 நாட்கள் தனிமை" - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே சம்பந்தப்பட்ட நபரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி அறிவித்து

தந்தி டிவி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மைய பிரதிநிதிகளிடம் கலந்து ஆலோசித்த பின்னர் இதனை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது சென்னையில் 30 பரிசோதனை மையங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விபரங்களை சேகரிப்பது உள்ளிட்ட வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். சோதனைக்கு வருபவர்கள் தங்கள் சுய விபரங்களை வழங்குவதோடு அவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் உள்ளவர்கள் விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 6 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"