தமிழ்நாடு

டிசி-யை கிழித்ததும் வந்த நல்ல புத்தி.. கலெக்டர் ஆபிஸில் +2 மாணவன் யூனிபார்மோடு கதறல்

தந்தி டிவி

தன்னை பள்ளியில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி மாணவர் ஒருவர் சீருடையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.காரமடை அடுத்த புங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர், புஜகனூரில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் பள்ளியில் போதை பொருட்களை பயன்படுத்தியதாக அவருடன் சேர்த்து சில மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சம்பந்தப்பட்ட மாணவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடையுடன் வந்து புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு படிக்க வேண்டும் என ஆசை உள்ளதாகவும், ஆனால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பள்ளி நிர்வாகம் சேர்த்துக்கொள்ளவில்லை எனவும் மாணவர் குமுறியுள்ளார். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்