தமிழ்நாடு

7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் - தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது

7 வயது சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
கோவையில், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், குற்றவாளி குறித்து தகவல் கிடைக்காத நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.அந்த அறிக்கையில், சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும்,குழந்தையின் வாய், மூக்கில் துணி வைத்து இறுக்கமாக மூடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.மேலும், கழுத்தில் கயிறு போன்றவை வைத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தவிர சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.இந்த அறிக்கையை அடுத்து,போலீசார் தங்களது முதல் தகவல் அறிக்கையில், இதனை கூடுதலாக பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கை இணைத்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்