தமிழ்நாடு

ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11 வரை நீதிமன்ற காவல்

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேனர் ஜெயகோபாலுக்கு வருகிற அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தந்தி டிவி

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேனர் ஜெயகோபாலுக்கு, வருகிற அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் 16 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார். பேனர் வைத்தது தமது தவறு தான் என நீதிபதி முன் ஜெயகோபால் ஒப்புக்கொண்டார்.

அவரை அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு