ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஒரு தம்பதி வாகனங்களின் குறுக்கே படுத்து ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மனைவியை கணவன் கடுமையாக தாக்கியதோடு, அப்பகுதியில் சென்றவர்கள் மீது கற்களை வீசியும் ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற போலீசார், இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.