தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அமோகம்" - காவல்துறையினர் அதிரடி

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்த 268 பேரை,போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அமோகம்" - காவல்துறையினர் அதிரடி

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்கு விற்பனை செய்த 268 பேரை,போலீசார் கைது செய்தனர்.முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கல்வராயன் மலை, வாழப்பாடி, மேட்டூர், கொளத்தூர், கருமலைக்கூடல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ஊறல்களை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ள சாராயம் விற்பனை செய்தாக 32 நபர்களை கைதும் செய்துள்ளனர். இது தவிர, கடந்த பத்து நாட்களில் டாஸ்மாக் சரக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையின் அதிரடி சோதனையில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்த மொத்தம் 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட் போலீஸ் தெரிவித்துள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு