தமிழ்நாடு

கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவில் ஊழல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்

கடந்த ஒரு ஆண்டில், இந்தியாவில் ஊழல் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பாக, Transparency International India என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 56 சதவீதம் பேர், கடந்த ஆண்டில் தாங்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய ஆய்வின் போது, 46 சதவீத மக்கள் மட்டுமே, லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், அதுகுறித்து அரசிடம் புகார் தெரிவிக்க முறையான தொலைபேசி உதவி எண்கள் இல்லை என 91 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.லஞ்சத்தை ரொக்கப்பணமாக மட்டுமே கொடுக்கிறோம் என 39 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஏஜென்டுகள் மூலமாக லஞ்சம் கொடுப்பதாக 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். லஞ்சம் ஊழலை ஒழிக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், அப்படியே சட்டம் இயற்றப்பட்டாலும் அதனால் பெரிய பலன் இல்லை என்றும் 48 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில், ஊழல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை