தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : ஜவுளி ஏற்றுமதி ரூ.1,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

கொரோனா அச்சத்தால், கரூர் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.

தந்தி டிவி
கொரோனா அச்சத்தால், கரூர் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்க உள்ளது. இது குறித்து ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து கூறுகையில், உலக அளவிலான ஜவுளி ஏற்றுமதியில் 70 சதவீதத்தை சீனா வைத்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சீன பொருட்களை இறக்குமதி செய்ய உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. அதனால், சீனாவுக்கு செல்லும் ஜவுளி வியாபாரம் தற்போது இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. இதையடுத்து, தற்போது 3 ஆயிரத்து 500 கோடியாக உள்ள கரூர் வர்த்தகம் மேலும் ஆயிரம் கோடி அதிகரிக்கும் என்று கூறினார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களின் தட்டுப்பாடு உள்ள நிலையிலும், ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நாச்சிமுத்து தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்