தமிழ்நாடு

மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழலை பள்ளிக்கு விடுமுறை அளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திடீரென பள்ளி கல்வி ஆணையர் நிறுத்தி வைத்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழலை பள்ளிக்கு விடுமுறை அளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திடீரென பள்ளி கல்வி ஆணையர் நிறுத்தி வைத்துள்ளார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விடுமுறை குறித்து பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பிரிகேஜி , எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வரும் 16 ந்தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க அறிவுறுத்தி பள்ளி கல்வித்துறை ஏற்கனவே சுற்றிக்கை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல, கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப்புற மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை