தமிழ்நாடு

"கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் " - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள், மருத்துவமனை தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே