தமிழ்நாடு

கொரோனாவை தடுக்கும் நச்சு கொல்லி பூச்சு - உருவாக்க ஆராய்ச்சி குழு புதிய முயற்சி

கொரோனா பரவலை தடுக்கும் நச்சுக்கொல்லி பூச்சு குறித்த ஆராய்ச்சியை பரீதாபாத்தைச் சேர்ந்த மண்டல உயிரிதொழில்நுட்ப மையத்தின் டாக்டர். அவினாஷ் பஜாஜ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்டுள்ளது.

தந்தி டிவி

இந்த குழுவானது, கொரோனா வைரசின் தெரிவு செய்த துகள்களின் சவ்வுகளைத் தாக்கும் மூலக்கூறுகளை உருவாக்குவதில் தனது நிபுணத்துவத்தை வழங்கும் என தெரிகிறது. இந்த மூலக்கூறுகள் , கண்ணாடி, பிளாஸ்டிக், பருத்தி, நைலான், போன்ற துணிகள் உள்ளிட்ட பல்வேறு மேல் பரப்புகளில் தங்கியிருக்கும் தொற்றுகளைக் கண்டறிந்து, அவற்றை ஆற்றலுடன் தடுக்கும் நச்சுக்கொல்லி பூச்சை வழங்கப் பயன்படும் என தெரிகிறது. உருமாற்ற சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த டாக்டர். மிலன் சுர்ஜித், ஐஐடி தில்லியின் ஜவுளி தொழில்நுட்பத் துறையை சேர்ந்த டாக்டர். சாம்ராட் முகோபாத்யாயா ஆகியோருடன் சேர்ந்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்