தமிழ்நாடு

முககவசம்,கிருமி நாசினி அதிக விலை விற்பனை தடுக்க வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

முக கவசம், சேனிடைசர் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க கோரிய வழக்கில் அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள அத்தியாவசிய தேவையான முக கவசம், சேனிடைசர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி, வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்தியாவசிய பொருட்களான முக கவசம், சேனிடைசர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது ஏழு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இது சம்பந்தமாக தமிழக அரசு மார்ச் 20க்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு