தமிழ்நாடு

கொரோனா மூன்றாவதுஅலையை எதிர்கொள்ளரூ.100 கோடி ஒதுக்கீடு

கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தந்தி டிவி

கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், கொரோனா நிவாரண நிதியாக இதுவரை 353 கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளதாகவும்,இந்த நிதி மூலம் ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் கண்டெய்னர்கள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வாங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.தற்போது அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான திரவ ஆக்சிஜன் வாங்குவதற்காகவும்,மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்