தமிழ்நாடு

கொரோனா மூன்றாவதுஅலையை எதிர்கொள்ளரூ.100 கோடி ஒதுக்கீடு

கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தந்தி டிவி

கொரோனா மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், கொரோனா நிவாரண நிதியாக இதுவரை 353 கோடி ரூபாய் பெறப்பட்டு உள்ளதாகவும்,இந்த நிதி மூலம் ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் கண்டெய்னர்கள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வாங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.தற்போது அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான திரவ ஆக்சிஜன் வாங்குவதற்காகவும்,மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே