தற்போது உள்ள நெருக்கடி நிலையால், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வர காலதாமதமாகும் என்பதால், அரை மணிநேரம் தாமதமாக தேர்வை துவக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதால், பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் இன்று நடைபெற இருக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளது.