தமிழ்நாடு

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி

அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது, தந்தையுடன் வந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதை கண்டறிந்தனர். இது கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் விமான நிலைய மருத்துவ குழுவினர் தந்தையுடன் சிறுவனை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்