தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 2,458 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 55 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்றும் மூவாயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 26 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 55 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 557 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 30 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவைக்கு அடுத்து ஈரோட்டில் 175 பேருக்கும், தஞ்சாவூரில் 171 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 153 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tasmac Issue | `டாஸ்மாக்’ விவகாரத்தில் கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை

Cracker Factory Fire Accident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Breaking | TVK MLA Poaching | தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கு | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

CM Vijay | Mekedatu | Karnataka | CM விஜய் கர்நாடகா பயணம்? அமைச்சர் கொடுத்த விளக்கம்

DMK MLA Markandeyan Case| தீர்ப்பில் சஸ்பென்ஸ் வைத்த ஐகோர்ட் - திமுக MLA மார்கண்டேயன் எடுத்த முடிவு