இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்கட்டமாக 530 கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி மூலம் அதிகபட்சமாக 1 நிமிடத்திற்கு 60 லிட்டர் ஆக்சிஜன் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் உயர் ஓட்ட ஆக்சிஜன் வழங்கும்போது கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் தீவிர மூச்சுத்திணறல் குறைந்து நுரையீரல் பாதிப்பும் தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.