இந்து ஆலயங்களின் உபரி நிதியை, வறுமையில் வாடும் கிராம கோயில் பூஜாரிகளுக்கும், ஏழை மக்களுக்கும் நிவாரணமாக வழங்க வேண்டும் என, வெள்ளிமலை மடாதிபதி வைதன்யானந்தஜி மகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மகாராஷ்டிராவில் இரு சன்னியாசிகள் மற்றும் அவர்களது வாகன ஓட்டுநர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.