நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைப்பதற்குள் வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து குன்னூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.