சில்லுனு காத்து...சாரல் மழை...குளுகுளு உதகை...
தொடர் விடுமுறையை ஒட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் சாரல் மழையுடன் இதமான காலநிலையை அனுபவித்தனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை, பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, கிக்யூ புல்வெளி மைதானங்களில் குவிந்து குளுகுளு காலநிலையை அனுபவித்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.