தமிழ்நாடு

இன்ஜினியரால் மன உளைச்சல் அடைந்த ஒப்பந்ததாரர் தற்கொலை

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் குமுடிமூலை கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. ஒப்பந்ததாராக வேலை செய்து வரும் இவர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வேலைகளை எடுத்து செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னை ஒஎம்ஆர் சாலையில் நடந்து வரும் பணிகளுக்கான பணத்தை தராமல் சூப்பர்வைசர் ராஜ்குமார் மற்றும் இன்ஜினியர் வெங்கட் ஆகிய இருவரும் இழுத்தப்படிப்பதாகவும், வேண்டுமென்றே தன்னை பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் தனக்கு 25 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு தனது குடும்பமே கடுமையான நெருக்கடியில் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட கலைமணி, பூவாலை பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கலைமணி குமுடிமூலை பகுதியின் தி.மு.க. கிளைச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்து வருவது குறிப்பிடதக்கது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை