தமிழ்நாடு

இன்ஜினியரால் மன உளைச்சல் அடைந்த ஒப்பந்ததாரர் தற்கொலை

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் குமுடிமூலை கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. ஒப்பந்ததாராக வேலை செய்து வரும் இவர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வேலைகளை எடுத்து செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னை ஒஎம்ஆர் சாலையில் நடந்து வரும் பணிகளுக்கான பணத்தை தராமல் சூப்பர்வைசர் ராஜ்குமார் மற்றும் இன்ஜினியர் வெங்கட் ஆகிய இருவரும் இழுத்தப்படிப்பதாகவும், வேண்டுமென்றே தன்னை பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனால் தனக்கு 25 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு தனது குடும்பமே கடுமையான நெருக்கடியில் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட கலைமணி, பூவாலை பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கலைமணி குமுடிமூலை பகுதியின் தி.மு.க. கிளைச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்து வருவது குறிப்பிடதக்கது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்