தமிழ்நாடு

ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி தொழிலாளி உயிரிழப்பு...

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சரக்கு ரயிலில் தலை நசுங்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சரக்கு ரயிலில் தலை நசுங்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிவரும் சரக்கு ரயில் பெட்டிகளில் நிலக்கரியை இறக்கிவிட்டு பெட்டிகளை இணைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திப்பம்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ரயில் பெட்டிகளுக்கு இடையே தலை நசுங்கி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், இறந்து போன மூர்த்தியின் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ