தமிழ்நாடு

தொடர் மழையால் மண்பாண்டத் தொழில் கடும் பாதிப்பு

தொடர் மழையால் மானாமதுரை மண்பாண்ட தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரம் மண்பாண்ட தொழிலுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு சீசனுக்கு ஏற்றவாறு கலைநயம் மிக்க மண்பாண்ட பொருட்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. வருகிற 30-ஆம் தேதி திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அங்கு விளக்குகள் தயாரிக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், விளக்குகள் தயாரிக்க தேவையான மணல் எடுப்பதிலும், தயாரிக்கப்பட்ட பொருட்களை உலர வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், மானாமதுரை, திருப்புவனம், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மழை காரணமாக உற்பத்தி கூடங்களை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், ஒருசில தொழிலாளர்கள் வீட்டினுள் வைத்து பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ