தமிழ்நாடு

நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி போராட்டம் : வசந்தகுமார் எம்.பி உள்பட 300 பேர் கைது

கன்னியாகுமரியில் சேதம் அடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரியில் சேதம் அடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வசந்தகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், போராட்டம் நடைபெற்றது. குமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், விபத்துகள் அதிகரித்து, உயிர்சேதம் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உள்பட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு