தமிழ்நாடு

சதாஃப் ஜப்பார், தாராபூரி ஆகியோரை கைது செய்தது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியதாக கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்துள்ள நிலையில் ப. சிதம்பரம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

உத்தரபிரதேச போலீசார் கைது செய்த காங்கிரஸ் கட்சியின் சதாஃப் ஜப்பார், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபூரி, பவன்ராவ் அம்பேத்கர் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், எவ்வித கலவரத்திலும் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை என போலீசார் அறிக்கை அளித்தனர். இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவர்களை ஜாமினில் விடுவித்தது. இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ஆதாரம் இல்லாமல் கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். அவர்களை நீதிமன்றம் ரிமான்ட் செய்தது, ஆதாரம் இல்லாமல், காவலில் வைக்க உத்தரவிட்டது எப்படி என சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ஆதாரத்தை பார்த்து கைது செய்ய சட்டம் சொல்கிறது என்றும், ஆனால், நடைமுறையில் அதை செய்யாதது வெட்கப்பட வேண்டியது என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை