தமிழ்நாடு

மாரடைப்பால் இறந்த காங்கிரஸ் பிரமுகர் : மருத்துவக் கல்லூரியிடம் உடல் தானமாக ஒப்படைப்பு

இறந்த பிறகு உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆய்வுக்காக தானம் செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் பிரமுகரின் ஆசையை அவரது உறவினர்கள் நிறைவேற்றி உள்ளனர்

தந்தி டிவி
குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்த ஜெயராம், மாரடைப்பால் காரணமாக இறந்துள்ளார். வேலூர் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் உயிருடன் இருக்கும் போதே தான் உயிரிழந்த பிறகு தனது உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜெயராம் முதலியாருக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டது. அவரது கண்கள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள மருத்துவமனைக்கு தானமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்