தமிழ்நாடு

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி-க்கு விதிக்கப்பட்ட சிறையை உறுதிப்படுத்துக - அரசு தரப்பு வாதம்

தந்தி டிவி

பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்துமாறு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.இது குறித்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வழக்கறிஞர்கள் வெங்கடேசன், ஹேமராஜன் ஆகியோர் ஆஜராகி, மேல்முறையீடு தொடர்பாக வாதிட்டனர். பின்னர் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, மேல்முறையீடு தொடர்பாக வாதிட கால அவகாசம் கேட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்தி ​வைத்து, மேல் முறையீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இதன் விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு