தமிழ்நாடு

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி-க்கு விதிக்கப்பட்ட சிறையை உறுதிப்படுத்துக - அரசு தரப்பு வாதம்

தந்தி டிவி

பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்துமாறு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.இது குறித்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வழக்கறிஞர்கள் வெங்கடேசன், ஹேமராஜன் ஆகியோர் ஆஜராகி, மேல்முறையீடு தொடர்பாக வாதிட்டனர். பின்னர் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, மேல்முறையீடு தொடர்பாக வாதிட கால அவகாசம் கேட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்தி ​வைத்து, மேல் முறையீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இதன் விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்