தமிழ்நாடு

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி-க்கு விதிக்கப்பட்ட சிறையை உறுதிப்படுத்துக - அரசு தரப்பு வாதம்

தந்தி டிவி

பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்துமாறு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.இது குறித்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வழக்கறிஞர்கள் வெங்கடேசன், ஹேமராஜன் ஆகியோர் ஆஜராகி, மேல்முறையீடு தொடர்பாக வாதிட்டனர். பின்னர் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, மேல்முறையீடு தொடர்பாக வாதிட கால அவகாசம் கேட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்தி ​வைத்து, மேல் முறையீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இதன் விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை