தமிழ்நாடு

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார்: சிதறிக் கிடந்த ரூ. 2.78 லட்சம் பறிமுதல்

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
நாங்குநேரி தொகுதியில் உள்ள அம்பலம் கிராமத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தப் பகுதி இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருவர் தப்பியதாகவும், அவர்களை துரத்தும் போது, ஒரு வீட்டில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டில் வாக்குக்கு பணப் பட்டுவாடா செய்ததாக வந்த தகவலின் பேரில் வந்த போலீசார், வீட்டின் முன்பு சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, அந்த வீட்டில் தங்கி இருந்த பெரியகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் உள்ளிட்டோரை போலீசாரிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர். ஆனால், தேர்தல் பணி செய்துவிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வீடு புகுந்து தாக்கியதாக எம்.எல்.ஏ. சரவணகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை