தமிழ்நாடு

கூடுதல் மருத்துவ கட்டணம் வசூல் புகார்.. உரிமம் ரத்து... - நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கூடுதல் கட்டணம் புகார் எதிரொலியாக, தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது

தந்தி டிவி

கூடுதல் மருத்துவ கட்டணம் வசூல் புகார்.. உரிமம் ரத்து... - நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கூடுதல் கட்டணம் புகார் எதிரொலியாக, தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து ஆட்சியர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அதிக மருத்துவ கட்டணம் வசூலிக்கும் புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவிட்டார். அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி