பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் சாதிய வன்கொடுமை புகார்
சாதிய வன்கொடுமை செய்வதாக தனது உறவினரும் அரசியல் பிரமுகருமான பழ.கருப்பையா மீது இயக்குநர் கரு.பழனியப்பன் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற கரு.பழனியப்பன், பழ.கருப்பையா மீது சாதிய வன்கொடுமை புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கரு.பழனியப்பன், கலப்பு திருமணம் செய்துகொண்டதால், 20 ஆண்டுகளாக குடும்பத்தில் தன்னை ஒதுக்கி வைத்து இருப்பதாகவும் தான் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினார்.