திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் கடையின் மாடியில் இருந்து சோனியா என்ற பெண், குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். கடையின் மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ரகு என்பவர் சினிமா பாணியில் துரிதமாகச் செயல்பட்டு சோனியாவை காப்பாற்றினார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.