தமிழ்நாடு

முதல், 2ம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் - சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை

முதலாமாண்டு மற்றும் 2ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடியாக வகுப்புகளை தொடங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த ஆண்டு இறுதியில் இளங்கலை இறுதி ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் துவக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் முதல், முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் நேரடியாக வகுப்புகளை துவங்க உயர் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், ஒரு வகுப்பிற்கு 25 முதல் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரி வளாகங்களை தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும், மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்கனவே வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.மேலும், விடுதிகளை திறக்கவும், கொரோனா பரிசோதனைக்கு பின் மாணவர்களை விடுதிகளில் அனுமதிக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை