தமிழ்நாடு

"படித்து முடித்தும் பட்டம் பெற முடியாத நிலை" : மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்முறை தேர்வு நடத்தப்படாத‌தால், மாணவர்கள் பட்டயம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்முறை தேர்வு நடத்தப்படாத‌தால், மாணவர்கள் பட்டயம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் அக்கரைபட்டி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட இரு பிரிவு மாணவர்களுக்கு செயல் முறை தேர்வு நடத்தப்பட வில்லை என தெரிகிறது. இதனால் படித்து முடித்து 3 ஆண்டுகள் ஆன போதும் மாணவர்கள் பலர் பட்டயம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்