சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணன், கடந்த 23ம் தேதி கல்லூரிக்கு சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கை கால்கள் கட்டப்ட்ட நிலையில் மாணவன் சரவணனின் சடலத்தை போலீசார் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாணவன் கொலையில் ஈடுபட்டுள்ளது சக மாணவர்களா அல்லது வேறு நபர்களா என்று தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.