தமிழ்நாடு

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை

கோவை அருகே விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து கேரளாவிற்கு மின்சாரம் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் திருச்சூருக்கு, தமிழகம் வழியாக டவர் லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட கோடாங்கிபாளையம் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. உடனடியாக அங்கு வந்த வட்டாட்சியர், விவசாயிகளின் பிரச்சினையை அரசிடம் எடுத்து சொல்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்